சர்வஜன வாக்குரிமை
சர்வசனவாக்குரிமை டொனமூர் ஆணைக்குழுவால் முன்வைக்கப்பட்ட முக்கியமான ஒரு சிபாரிசாகும்.இ தன்படி 21 வயதை அடைந்த இலங்கை மக்கள் அனைவருக்கும் வாக்குரிமை வ ழங்கப்பட்டது. குறிப்பாக ஆண், பெண் அனைவருக்கும் இனம், மதம், மொழி வேறுபாடின்றி வாக்குரிமை வழங்கப்பட்டது. சர்வசன வாக்குரிமை பிரித்தானிய குடியேற்ற நாடுகளில் இலங்கைக்கே முதன்முதலில் வழங்கப்பட்டது. சர்வசன வாக்குரிமை வழங்குவதனை பல அரசியல் தலைவர்கள் எதிர்த்த போதும் கூட டொனமூர் குழு அனைவருக்கும் வழங்கியது ஒரு சிறப்பான செயலாகும். இவ் விதப்புரைக்கு அடிப்படையாக அமைந்த காரணிகள் கல்வித் தகைமையை அடிப்படையாகக் கொண்டு கற்றவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் வாக்குரிமை முறை தவறானது. மக்கள் அனைவரும் பொறுப்புணர்சியுடன் ஆட்சியில் பங்கெடுப்பதன் மூலம் அவர்கள் மத்தியில் அரசியல் அறிவும் அக்கறையும் வளர்ச்சியடையும். வறுமை நிலையில் பின்தங்கியிருக்கும் மக்கள் குழுவை அரசியல் ரீதியாகப் பலப்படுத்தி அவர்களுக்கு அபிவிருத்தியை பெற்றுக்கொடுத்தல். கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையிலான சமமற்ற அபிவிருத்திகளை இல்லாது ஒழித்தல். அதாவது இலங்கையில் பொது நிர...