Posts

Showing posts from February, 2021

தென்னாசியாவில் சட்டவாட்சியை வலுப்படுத்தும் தகவல் உரிமை சட்டம்.

Image
தென்னாசியாவில் சட்டவாட்சியை வலுப்படுத்தும் தகவல் உரிமை சட்டம்.  தொடர் 1. https://drive.google.com/file/d/1WnekMSUKVS1dGrlF1q4fmPNw9fiVUXWY/view?usp=drivesdk தொடர் 2. https://drive.google.com/file/d/1WwOJSDZE3tXM0L8jwWv10VutmlPycjqN/view?usp=drivesdk தொடர் 3. https://drive.google.com/file/d/1WwS7XRmB5SknDwCxPfIb31DvlALVn_Dh/view?usp=drivesdk தொடர் 4. https://drive.google.com/file/d/14Fbn-CozLQhssLpB0P4LZEmSnxd9D8qh/view?usp=drivesdk கட்டுரை : S. Vithurshan, Special in political science University of Peradeniya.

அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹாரிஸ்

Image
  "நான் முதல் பெண்மணியாக இருக்கலாம். ஆனால், கடைசியாக இருக்க மாட்டேன்" - கமலா ஹாரிஸ் அறிமுகம் இன்று அனைவராலும், அனைத்து நாடுகளிலும், குறிப்பாக அமேரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் பரவலாக பேசப்படும் ஒருவராக கமலா ஹாரிஸ் காணப்படுகிறார். அமெரிக்காவின் அதிபர் பதவிக்கான வேட்பாளரைத் தேர்வு செய்யும் ஜனநாயகக் கட்சியின் உட்கட்சிப் போட்டியில் களமிறங்கிய பிறகுதான், உலக அளவில் அனைவராலும் பேசப்பட்டார். இதன் பின்னரே இவர் மீது அதிக ஊடக வெளிச்சம் பாயத் தொடங்கியது. அந்தப் போட்டியில் வெல்ல முடியவில்லை என்றாலும், இப்போது ஜோ பைடனின் அதிபர் தேர்தல் வெற்றி மூலம் அமெரிக்காவின் துணை அதிபர் ஆகியுள்ளார் கமலா ஹாரிஸ். தான் வெற்றி பெற்றால் கமலா ஹாரிஸ் துணை அதிபர் ஆக்கப்படுவார் என்று பைடன் அறிவித்தபோது, கமலா மீது இவ்வளவு கவனம் விழக் காரணம் அமெரிக்க துணை அதிபர் பதவியில் இதுவரை ஒரு பெண்ணோ, ஆப்ரிக்க-அமெரிக்க வம்சாவளியினரோ, ஆசிய-அமெரிக்க வம்சாவளியினரோ இருந்ததில்லை என்பதால் ஆகும். முன்னதாக ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கான உள்கட்சி போட்டியில் கடுமையாக ஈடுபட்டு தோற்றவர் கமலா. இதையொட...

இலங்கையும், ஐக்கிய நாடுகள் சபையும்.

Image
  அறிமுகம் இன்று சர்வதேச அளவில் முக்கியம் பெறுவதும், முதன்மையானதுமான அமைப்பாக ஐக்கிய நாடுகள் சபை உள்ளது. முதலாம் உலகப் போரை தொடர்ந்து அதனால் ஏற்பட்ட பாரிய விளைவுகள் காரணமாக அது போன்றதொரு யுத்தமோ நாசகார அழிவுகளோ ஏற்படக் கூடாது என்பதற்காக சர்வதேச சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டது.இது  வூட்ரோவில்சனின் பதினான்கு அம்ச கோரிக்கைகளுள் ஒன்றாக கானப்பட்டது. எனினும் இதன் செயற்பாடுகள் போதியளவான செயற்பாடுகளையோ அமைதியை நிலைநாட்டவோ இல்லை இதற்கு காரணம் அரசுகள் சர்வதேச சங்கத்தின் விதிகளை அல்லது சட்டங்ளை மீறி செயற்பட்டமை ஆகும். இதன் பலவீனம் காரனமாகவே இரண்டாம் உலக மகாயுத்தம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்தே 1944ம் ஆண்டில் ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான் முதலிய அச்சு நாடுகளுக்கு எதிராக இரண்டாம் உலகப்போரை நடத்தி வந்த அமெரிக்கா பிரிட்டன், சோவியத் யூனியன், சீனா முதலிய நாடுகள் ஆகஸ்ட் 21ம் திகதி வாஸிங்டன் ஒக்ஸ் என்ற பகுதியில் ஒரு மாநாட்டை கூட்டி ஆலோசித்து வந்தன. அதற்கு டம்பர்டன் ஒக்ஸ் மாநாடு என்று பெயர்.   இதனடிப்படையில் 1945 ஜீன் 26ம் திகதி முறைப்படியாக பல நாடுகளும் ஏற்றுக் கொண்டதன் வாயிலாக   அன்றை...