Posts

Showing posts from January, 2021

கால்மார்க்சும், மாக்சிச சிந்தனையும்.

Image
  கார்ல் மார்க்சு என்கிற கார்ல் என்ரிச் மார்க்சு (Karl Heinrich Marx, கார்ல் என்ரிச் மார்க்ஸ் 5 மே 1818 அன்று பிறந்தார்.  ஜேர்மனிய மெய்யியலாளர்களுள் ஒருவராவார். அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவர். மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராகக் கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார். பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார் என்றாலும் இவரது ஆய்வுகளும், கருத்துக்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வதாகவே அமைந்தது. பொதுவுடைமைக் கொள்கைகளின் மூலவர்களுள் ஒருவராக கார்ல் மார்க்சு கருதப்படுகிறார். மற்றையவர் பிரெட்ரிக் ஏங்கல்சு ஆவார். மூலதனம் நூல்: அக்காலத்தில் இங்கிலாந்து, ஐரோப்பாவிலிருந்து வெளியேறிய அரசியல் ஏதிலிகளுக்குரிய புகலிடமாக இருந்தது. அக்காலகட்டத்தில் பெரும் முயற்சியில் கட்டிய பிரமாண்டமான பிரித்தானிய அருங்காட்சியகத்தின் கட்டுமான வேலைகள் நிறைவுற்றிருந்தது. மார்க்சு நாள் தவறாது அங்குச் சென்று ஒவ்வொரு ...

மாக்கியவெல்லியும் அரசியல் விஞ்ஞானத்திற்கு ஆற்றிய பங்களிப்பும். மாக்கியவெல்லி வாழ்க்கை:

Image
  மாக்கியவெல்லியும் அரசியல் விஞ்ஞானத்திற்கு ஆற்றிய பங்களிப்பும்.   மாக்கியவெல்லி வாழ்க்கை: நிக்கோலோ மாக்கியவெல்லி என சுருக்கமாக அறியப்படும் நிக்கோலோ டி பர்னாடோ டெயி மாக்கியவெல்லி (Niccolò di Bernardo dei Machiavelli) ஒரு இத்தாலிய ராஜதந்திரியும், அரசியல் மெய்யியலாளரும், இசைக் கலைஞரும், கவிஞரும், நாடகாசிரியரும் ஆவார். நவீன அரசியலின் தந்தை என அழைக்கப்படுகிறார். இத்தாலியின் புளோரன்ஸ் நகரத்தில் - மே 3, (1469 – சூன் 21, 1527 ) நிக்கலோ மாக்கியவல்லி பிறந்தார். இவருடைய குடும்பம் பணவசதியோ, சமூக அந்தஸ்த்தில் உயர்ந்த குடும்பமாகவோ இருந்திருக்கவில்லை. ஆனால் நகர மட்ட மானிட வட்டத்திற்குள் புகழ்வாய்ந்த குடும்பமாக காணப்பட்டிருந்தது. மாக்கியவல்லியின் தந்தை பெர்னார்டோ டி நிகோலோ மாக்கியவெல்லி (Bernardo di Nicolo Machiavelli) ஒரு வழக்கறிஞராக இருந்ததுடன் புராதன வரலாறு பலவற்றையும் கற்றிருந்தார். மாக்கியவல்லி புளோரன்ஸ் பல்கலைக்கழகத்தில் தனது உயர்கல்வியை பூர்த்தி செய்ததுடன் லத்தீன் மொழி, மானிடவியல் ஆகிய துறைகளில் புலமை வாய்ந்தவராகவும் காணப்பட்டிருந்தார். மாக்கியவல்லியின் காலத்திற்கு இத்துறைகளில் புலமை ...

அரசியல் விஞ்ஞானத்திற்கும், பொதுத்துறை நிர்வாகத்திற்கும் மக்ஸ் வெபரின் பங்களிப்பு.

Image
  அரசியல் விஞ்ஞானத்திற்கும், பொதுத்துறை நிர்வாகத்திற்கும் மக்ஸ் வெபரின் பங்களிப்பு.  அறிமுகம் அரசியல் விஞ்ஞானத்துறையில் முக்கியமான ஒருவர். பொதுத்துறை நிர்வாகத்தில் பாரிய மாற்றங்கள் கொண்டு வர காரணமாக இருந்தவர். மக்ஸ் வெபர் என அழைக்கப்படும் மக்சிமிலியன் கார்ல் எமில் வெபர் (Maximilian Carl Emil Weber) (21 ஏப்ரல் 1864 – 14 ஜன் 1920) ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு அரசியல் பொருளியலாளரும், சமூகவியலாளரும் ஆவார். இவரே பொது நிர்வாகத்துறையிலும் சமூகவியலிலும் தற்கால ஆய்வுகளைத் தொடக்கி வைத்தவர் எனக் கருதப்படுகிறார். பெர்லின் பல்கலைக்கழகத்தில் முதலில் பணியாற்றத் தொடங்கிய அவர், பின்னர், ஃபிரீபர்க், ஹெய்டில்பர்க், மியூனிச் ஆகிய பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றினார். வெபருடைய முதன்மை ஆக்கங்கள், பகுத்தறிவாக்கம் (rationalization), மதச் சமூகவியல்(sociology of religion), அரசு ஆகிய துறைகள் சார்ந்தவை. இவருடைய மிக முக்கிய ஆக்கம், புரட்டஸ்தாந்த நெறிமுறைகளும் முதலாளித்துவ ஆற்றலும் (The Protestant Ethic and the Spirit of Capitalism) என்னும் கட்டுரையாகும். இக் கட்டுரையில், மேலைநாட்டுப் பண்பாடும், கீழைநாட்டுப் பண்ப...

நவீன அரசியல் கருத்தியல்களும் மதச்சார்பின்மை வாதமும்

Image
  நவீன அரசியல் கருத்தியல்களும் மதச்சார்பின்மை வாதமும் இன்று உலகில் முக்கியம் பெறும் விடயமாக கருத்தியல்கள் உள்ளது. கருத்தியல் என்பது  "அரசியல் மற்றும் சமூக பெறுமதிகளை பங்கீடு செய்தல் தொடர்பாக கவனம் செலுத்தும் கருத்துக்களின் முறைமையாகும்"  என S.P.Huntington கூறுகிறார்.  ஆகவே சமூகத்தின் அரசியல் அறிவிற்கு, தனி நபர்கள் மற்றும் சமூக குழுக்களின் அரசியல் செயற்பாட்டிற்கும், அரசியல் நிறுவனங்களின் தன்மை மற்றும் பணிகளையும் தீர்மானிப்பதில் செல்வாக்கு செலுத்துகின்ற ஒழுங்கமைந்த வகையில் காணப்படும் அரசியல் கருத்துக்களின் தொகுதியே அரசியல் கருத்தியல்களாகும். அரசியல் கோட்பாடுகள் மற்றும் அரசியல் சிந்தனைகள் என்பன இதற்காக பயன்படுத்தப்படுகின்ற இருவேறு பதங்களாகும். இந்தவகையில், மிகமுக்கியமான அரசியல் கருத்தியல்களாக  1.தாராண்மை வாதம் 2. முதலாளித்துவம் 3.மார்க்சிஸம். 4.பாஸிசம் 5. குடியரசு வாதம் 6.சமூக ஜனநாயக வாதம் 7.தேசிய வாதம் 8. மதசார்பின்மைவாதம், 9. பெண்ணிய வாதம் போன்றவற்றை அடையாளப்படுத்தலாம்.  இதனால் கருத்தியல் அரசியலில் சிறப்பிடம் பெறுகிறது. வெளிப்படையாகச் சொல்லப்பட்டாலும் சொல்லப...

அடிப்படை உரிமைகளும், இலங்கையிலுள்ள ஏற்பாடுகளும்

Image
  அனைவருக்கும் தேவையான விடயம் மனித உரிமை எண்ணக்கரு. அநீதியை எதிர்த்து நீதியை நிலை நாட்ட உரிமை மீறல் பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும். அந்தவகையில் இலங்கையில் ஒம்புட்ஸ்மன் முறைமை பற்றிய தெளிவினை அறிய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.  அறிமுகம் இன்றைய அரசாங்கங்களின் நிர்வாகக் கடமைகள் அதிகரித்து வருகின்றன. பொது நிர்வாகமானது மக்களின் அநேக தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்புடனும், நிர்வாகக் கடமைகள், செயற்பாடுகள் தொடர்பாக மக்களுக்குப் பொறுப்பு கூற வேண்டிய நிலையிலும் உள்ளது. நவீன உலகில் மக்களுக்கான நலன்புரி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தார்மீகப் பொறுப்பு அரசாங்கங்களிடம் உள்ளது. இதனால் சிவில் சேவை அமைப்பு விஸ்தரிக்கப்பட்டதுடன்,அதன் வேலைப்பழுவும் அதிகரித்தது. சிவில் சேவை அமைப்பில் ஏற்பட்ட விஸ்தரிப்பினால் சிவில் சேவையாளர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகக் காணப்பட்டது. அதிகாரத் துஷ்பிரயோகத்தைத் தடுத்து நிறுத்தி, மக்களுக்குத் தூய்மையான சேவையை வழங்குவதற்குப் புதிய பாதுகாப்பு ஒழுங்குகள் தேவைப்பட்டன. தூய்மையற்ற நிர்வாகச் செயற்பாடுகள் தொடர்பாக மக்கள் முறைப்பாடு...

1978 ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்பில் அடிப்படை உரிமைகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும்

Image
  1978 ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்பில் அடிப்படை உரிமைகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் அறிமுகம் மனித உரிமைகள் என்பது மனிதன் இயற்கையாக தனது வாழ்க்கையைக் கொண்டு நடாத்துவதற்குத் தேவைப்படும் அடிப்படை உரிமைகள் என அர்த்தப்படுத்தலாம். அதனால் எந்த ஒரு நாட்டிலும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான சட்டம் என்ற பெயரில் தனியான சட்டங்கள் இருப்பதைக் காண முடிவதில்லை. மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளை நாம் மனித உரிமைகள் என்று அழைக்கிறோம். சாதி, மதம், பால், இனம், நாட்டுரிமை ஆகிவற்றிற்கு அப்பால், ஒவ்வொரு தனி மனிதருக்கும் பொதிந்திருக்கக் கூடிய பிறப்புரிமைகளை, மனிதனின் சுதந்திரத்திற்கும், கண்ணியத்திற்கும், நலன்களுக்கும் அவசியமான உரிமைகளை, மனித உரிமைகள் என்று நாம் அழைக்கின்றோம். மனிதர்களுக்கு மனித உரிமைகள் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவதால் சில நேரங்களில் மனித உரிமைகளை அடிப்படை உரிமைகள் என்றும், இயற்கை உரிமைகள் என்றும், பிறப்புரிமைகள் என்றும், உள்ளார்ந்த உரிமைகள் என்றும் நாம் அழைக்கின்றோம். ஒவ்வொரு நாட...

1972 ஆம் ஆண்டு முதலாம் குடியரசு யாப்பின்படி இலங்கையின் தேசிய அரசுப் பேரவை

Image
  1972 ஆம் ஆண்டு முதலாம் குடியரசு யாப்பின்படி  இலங்கையின் தேசிய அரசுப் பேரவை தேசிய அரசுப் பேரவை (National State Assembly) என்பது இலங்கையின் முதலாவது குடியரசு அரசியலமைப்பின் படி 1972 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சட்டவாக்க சபை ஆகும். 1947 இல் உருவாக்கப்பட்ட இரு அங்க இலங்கை நாடாளுமன்றம் (இலங்கை பிரதிநிதிகள் சபை மற்றும் இலங்கை செனட் சபை) ஆகியவை இல்லாதொழிக்கப்பட்டு ஓரங்க முறைமையுடன் கூடிய தேசிய அரசுப் பேரவை உருவாக்கப்பட்டது. 1970ம் ஆண்டில் நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான ஐக்கிய முன்னணி (ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்ரீலங்கா சமசமாஜக் கட்சி ஆகிய மூன்று கட்சிகளின் கூட்டு) ஏற்கனவே, 1947ம் ஆண்டு முதல் இலங்கையில் நடைமுறையில் இருந்த சோல்பரி அரசியலமைப்பிற்கு பதிலாக புதியதோர் அரசியல் அமைப்பினை உருவாக்கி, 1972 மே 22ம் திகதி பிரகடனப்படுத்தியது.  இந்த அரசியலமைப்பு முதலாம் குடியரசு அரசியலமைப்பு எனப்படுகின்றது. 1972-1978 காலப்பகுதியில் சட்டவாக்கத்துறையான நாடாளுமன்றம் தேசிய அரசுப் பேரவை என்று கூறப்பட்ட...

1972 ஆம் ஆண்டு முதலாம் குடியரசு யாப்பின்படி இலங்கையின் சனாதிபதி

Image
  1972 ஆம் ஆண்டு முதலாம் குடியரசு யாப்பின்படி இலங்கையின் சனாதிபதி மே 22 1972 ல் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட முதலாம் குடியரசு அரசியலமைப்பின் கீழ் இலங்கைத் தலைவராக சனாதிபதிப் பதவி ஏற்படுத்தப்பட்டது. இதற்கு முன்னைய சோல்பரி அரசியலமைப்பில் மகா தேசாதிபதியால் புரியப்பட்ட கடமைகளில் பெரும்பாலானவை சனாதிபதியால் புரியப்பட்டது. இங்கு முக்கிய மாற்றமாக சோல்பரி அரசியலமைப்பின் கீழ் நாம நிர்வாகமாகக் காணப்பட்ட மகாதேசாதிபதி (இலங்கை) பிரித்தானிய முடியால் நியமிக்கப்படுவார்.  இதனால் அவர் பிரித்தானிய முடிக்கு பொறுப்புச் சொல்ல வேண்டியவராக இருந்தார். ஆனால், 1972ம் ஆண்டு முதலாம் குடியரசு அரசியலமைப்பின் கீழ் சனாதிபதியை இலங்கைப் பிரதமர் நியமிப்பார். இவர் இலங்கைப் பிரதமருக்கும், மந்திரி சபைக்குப் பொறுப்புக் கூறக்கூடியவர். ஆகவேதான் சனாதிபதி நாம நிர்வாகியாகக் கருதப்பட்டார். சனாதிபதியின் தன்மைகள், தத்துவங்கள்: அரசியலமைப்பின் 7ம் அத்தியாயம் 19, 20, 21ம் உறுப்புரைகள் குடியரசின் சனாதிபதியின் தன்மைகள், தத்துவங்கள் என்பவற்றைக் குறிப்பிடுகின்றன. 19ம் உறுப்புரை இலங்கைக் குடியரசின் சனாதிபதி ஒருவர் இருத்தல் வேண்டும்....

மனிங்-டிவன்ஷயர் அரசியல் திருத்தம்:1924-1931

Image
  மனிங் - டிவன்ஷயர் அரசியல் திருத்தம்: 1924-1931 யாப்புருவாக்க பின்னணி: மனிங் - டெவொன்சயர் அரசியல் சீர்திருத்தம் ( Manning-Devon shire Reforms)  என்பது இலங்கையில்  1924  முதல்  1931 ம் ஆண்டு வரை வழக்கிலிருந்த அரசியலமைப்பு. பிரித்தானியரால் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட நான்காவது அரசியலமைப்பும் இதுவே.  1921 ம் ஆண்டு முதல்  1924 ம் ஆண்டு வரை தற்காலிக மெனிங் அரசியலமைப்பு இலங்கையில் அமுலிலிருந்த காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தமது நலவுரிமைகளுக்காக குரல்கொடுத்ததன் விளைவாகவும் இலங்கையில் உருவாக்கப்பட்டிருந்த தேசிய காங்கிரசின் அழுத்தங்கள் காரணமாகவும் உள்நாட்டுப் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முகமாக இந்த அரசியலமைப்பு அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். மனிங்   அரசியலமைப்பின் செயற்பாட்டில் காணப்பட்ட குறைபாடுகளை அவதானித்த இலங்கையர்கள் புதிய யாப்புத் திருத்தம் கோரி மனுக்களை முன்வைத்தனர். குறிப்பாக சேர் ஜேம்ஸ் பீரிஸ் ,  தமிழர் ஐக்கிய முன்னணியினர் சில நகல்  திட்டங்களை ஆள்பதி   மனிங் கிடம் கையளித்தனர். இவை யாவற...